தமிழக செய்திகள்

தஞ்சை நூற்றாண்டு பழமையான யூனியன் கிளப்பிற்கு சீல்..!

தஞ்சையில் நூற்றாண்டு பழமையான யூனியன் கிளப்பிற்க்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தஞ்சாவூர் யூனியன் கிளப் கடந்த 1895 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கிளப் தொடர்ந்து செயல்படுவதற்கான உரிமத்தை சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் உரிமத்தை தாக்கல் செய்ய வில்லை.

இந்த நிலையில் முறையான உரிமையின்றி செயல்பட்டதாக கூறி இன்று காலை யூனியன் கிளப்பிற்கு சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்