தமிழக செய்திகள்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மார்கழி அமாவாசையையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தினத்தந்தி

பாளையங்கோட்டை:

மார்கழி மாத அமாவாசையையொட்டி, நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகிலும், குறுக்குத்துறை இசக்கியம்மன் கோவில் அருகிலும், வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் அருகிலும் நேற்று ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்கள்.

நெல்லை அருகன்குளம் அருகே உள்ள ஜடாயு தீர்த்தத்தின் அருகில் உள்ள ஜடாயுத்துறையிலும் பெரும்பாலானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். மார்கழி அமாவாசையையொட்டி நெல்லை சந்திப்பு சாலைகுமார சுவாமி கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு