தமிழக செய்திகள்

மிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

மிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

தினத்தந்தி

தமிழ்நாட்டில் நாளை (வியாழக்கிழமை) மிலாடிநபி விழாவும், வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மதுபான கூடங்களும் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் நாளை மற்றும் வருகிற 2-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்) மற்றும் ஆனி மேரி ஸ்வர்ணா(அரியலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை