தமிழக செய்திகள்

பெரியமேட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரியமேட்டில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சென்னை பெரியமேடு அல்லிக்குளம் இணைப்பு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியை கண்காணித்த போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர், நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் (22) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை