தமிழக செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூர்- ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், விவசாயி.

இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தகவல் தெரிவிக்காமல் நண்பர்களுடன் 3 நாள் வெளியூர் சுற்றுலா சென்று விட்டு ராஜாபாளையம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ரவிச்சந்திரன், அவரது மனைவி வாசுகி ஆகியோர் சதீஷ்குமாரிடம் ஏன் சொல்லாமல் ஊர் சுற்றி விட்டு வந்திருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

பின்னர் வீட்டுக்கு வந்த பற்றோர் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து