தமிழக செய்திகள்

தேன்கனிக்கோட்டையில்மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட அரசஜீர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து மாரியம்மன் மற்றும் முத்தப்பா சாமிகள் கிராமங்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது வீடுகள் தோறும் பூஜைகள் செய்து ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் தங்களது உறவினர்களுக்கு அசைவ விருந்து வழங்கினர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்