தமிழக செய்திகள்

கோவில் சொத்துகள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம்; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.கே.சேகர்பாபு கோவில்களின் சொத்துகள், ஆவணங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் முதலான அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளார். அமைச்சரின் இந்த செயல்பாட்டை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது. நவீன காலத்தில் பத்திர பதிவு, நீதித்துறை போன்ற துறைகள் கம்ப்யூட்டர்மயமாக மாற்றப்பட்டு உள்ளது. அதுபோல, இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து செயல்பாடுகளும், சொத்துகளும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த செயல்பாடு முடிக்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தால் தான் அது பயன்தரும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது நம்பிக்கை வைத்து, அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். அதனை சீரிய முறையில் பயன்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள சீர்கேடுகளை களைந்து, சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதிக்க அமைச்சரை, திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்