தமிழக செய்திகள்

தென்பெண்ணையாற்று தரைப்பாலம் மூழ்கியது

திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்று தரைப்பாலம் மூழ்கியது போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி

திருக்கோவிலூர்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் தென்பெண்ணையாற்றிலும் தற்போது மழை நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் சாத்தனூர் அணை அதன் கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ஓடுகின்ற மழை நீருடன், அணை தண்ணீரும் இரண்டற கலந்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் பாலத்தின் இருபுறத்திலும் தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை