தமிழக செய்திகள்

காரைக்கால்- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

தொடர் விடுமுறையால் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில், இன்று சனிக்கிழமை என்பதால், கோவிலில் கூட்டம் நிறைந்து கானப்பட்டது. மேலும், தொடர் விமுறை என்பதால், தொடர் விடுமுறையால் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக முக கவசம் அணிந்து வரும் பகதர்களுக்கே கோயிலில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.  

SCROLL FOR NEXT