தமிழக செய்திகள்

நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி பணிகளை தொடங்கினார் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. எனவே அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு பணியில் முழு அளவில் ஈடுபடவில்லை. எனவே தலைமை செயலகத்துக்கு அவர்கள் வராமல் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், 26-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் பல அமைச்சர்கள் வந்து அரசு பணிகளைத் தொடங்கினர்.

எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்