தமிழக செய்திகள்

கல்குவாரி குட்டையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் - திண்டிவனத்தில் பரபரப்பு...!

திண்டிவனத்தில் கல்குவாரி குட்டையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடகொளப்பாக்கம் கிராம கல்குவாரி குட்டையில் பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தை கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பிரம்மதேசம் போலீசார் குழந்தையின் சடத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்குவாரி குட்டையில் பச்சிளம் குழந்தை யார் வீசினார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு