தமிழக செய்திகள்

காமங்கலத்தில் பாம்பு கடித்து சிறுவன் சாவு

தினத்தந்தி

காரிமங்கலம்

காரிமங்கலம் அடுத்த முரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்துரு (வயது 5). இந்த நிலையில் சந்துரு வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது பாம்பு சிறுவனை கடித்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த மணிகன்டன் மகனை பாம்பு கடித்ததை அறிந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் சந்துரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை