தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட விவகாரம்..காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி

ராஜசேகரை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றி, காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

தனது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், கூவத்தூர் காவல் நிலையத்தில் மதுபோதையில், நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி, அலப்பறை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், போலீசார் நாகராஜை தாக்கியதால் கால் உடைந்து மாவுகட்டு போடப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் கூவத்தூர் காவல்நிலைய தலைமை காவலர் ராஜசேகர் என்பவர், நாகராஜை தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து ராஜசேகரை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றி, காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதோடு, கூவத்தூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்