தமிழக செய்திகள்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை: ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடந்த சில ஆண்டுகளில் நசிந்து இப்பொழுது குலைந்து விட்டன இதற்கான ஆய்வில் கலந்து கொண்ட 2029 நிறுவனங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் நட்டமடைந்து

கணிசமான எண்ணிக்கை நிறுவனங்கள் மூடப்பட்டன. 50 சதவீத வேலைகள் காலியாக உள்ளன. அவற்றில் பணியாற்றியவர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை. இ.சி.எல்.ஜி.எஸ். திட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. குறு, சிறு தொழில்களுக்கு கடன் கொடுத்து அவர்களை மீட்பதற்கு வங்கிகள் தயங்குகிறார்கள். அரசின் பேச்சு அதிகம், செயல்பாடு குறைவு என்பதை இந்த ஆய்வு தெளிவாக புலப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்