தமிழக செய்திகள்

தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் ரூ.10¾ லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது -அண்ணாமலை

பிரதமர் மோடி எப்போதும், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே சான்று.

தினத்தந்தி

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி எப்போதும், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே சான்று. பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை திசை திருப்பும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராக மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட புயல் தாக்கத்தின்போது அந்த மாநில அரசு கேட்ட ரூ.9 ஆயிரத்து 836 கோடியில், மத்திய அரசு ரூ.ஆயிரம் கோடி வழங்கியது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. அதேநேரம், குஜராத் மாநிலத்திற்கு 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன.

கொரோனா பாதிப்பின்போது தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.868 கோடியை மானியமாக வழங்கியது. குஜராத்திற்கு ரூ.304 கோடி மட்டுமே வழங்கியது. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் மானியங்கள், மத்திய நிதியுதவி திட்டங்கள் உள்பட பல திட்டங்கள் மூலம் தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடி பெற்றுள்ளது.

இது கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் அளித்த வரியைவிட 2 மடங்கு அதிகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து