தமிழக செய்திகள்

கூடுதல் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து, அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் கூடுதல் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து, அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆதாலால் தமிழகத்தில் கூடுதல் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்