தமிழக செய்திகள்

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

காஞ்சீபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த 6 மாதம் சம்பள பாக்கி உள்ளது. பலமுறை சம்பள பாக்கி குறித்து நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறாமல் இருந்துள்ளனர். 6 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறி பெருமாள் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை தடுத்தனர். தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த நிலையில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து