தமிழக செய்திகள்

நாய்கள் கடித்ததால் மான் செத்தது

தியாகதுருகம் அருகே நாய்கள் கடித்ததால் மான் செத்தது

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தையொட்டி மகரூர் காப்புக்காடு அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் வந்து செல்வது வழக்கம். அதன்படி விவசாய நிலத்துக்கு வந்த பெண் புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதில் படுகாயம் அடைந்த மான் எஸ்.ஒகையூர் ஓம் சக்தி கோவில் அருகே விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மானுக்கு தண்ணீர் கொடுத்தனர். இருப்பினும் அந்த மான் பரிதாபமாக செத்தது. இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை வனச்சரக காவலர் சகாதேவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும் எஸ்.ஒகையூர் கால்நடை மருத்துவர்(பொறுப்பு) சுகம் தலைமையில் மருத்துவ குழுவினர் இறந்து போன மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் இறந்த மானை மகரூர் காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு