தமிழக செய்திகள்

தவறி விழுந்து பெண் சாவு

தேனி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக பலியானார்.

தினத்தந்தி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சொக்கநாடு எஸ்டேட்டை சேர்ந்த செல்வராஜ் (வயது 66). அவரது மனைவி மஸ்தா (62). கடந்த 28-ந்தேதி செல்வராஜ், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோட்டூரிலிருந்து பெரியகுளத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னஞ்சி விலக்கு என்னுமிடத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து மஸ்தா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஸ்தா இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து