தமிழக செய்திகள்

2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம்

2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கரூர் அருகே உள்ள வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் பகுதியில் உள்ள மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டன. 2-வது நாளாக நேற்றும் மணல் குவாரி செயல்படவில்லை. இதனையடுத்து லாரிகள் நிறுத்தும் செம்மடை பகுதியில் 3 நாட்கள் குவாரி விடுமுறை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்