தமிழக செய்திகள்

மணல் அள்ளி சென்ற லாரி டிரைவர் கைது

கேரளாவுக்கு மணல் அள்ளி சென்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அனுமதி சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் உதவி புவியியலாளர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா மாநில பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் கலாவதியான அனுமதிச்சீட்டு வைத்து எம்-சாண்ட் மணலை கேரளாவுக்கு அள்ளி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் மேரிகுளத்தை சேர்ந்த லாரி டிரைவர் வர்கீஸ் (வயது 46) என்பவரை கைது செய்தனர். லாரி உரிமையாளரான சிண்டோவை போலீசார் தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு