தமிழக செய்திகள்

வியாபாரியிடம் திருடியவர் கைது

வியாபாரியிடம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் அண்ணாநகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). இவர் கரூர் பஸ் நிலையம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தினேஷிடம் பழம் வாங்குவது போல் மர்ம ஆசாமி ஒருவர் நைசாக பேசி அவரது மணி பர்சை திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து மணி பர்சை திருடி சென்ற திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த பாலமுருகன் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.