தமிழக செய்திகள்

கடலூரில் 20-ந் தேதி அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்ற கூட்டம் அதிகா தகவல்

கடலூரில் 20-ந் தேதி அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்ற கூட்டம் நடைபெற இருப்பதாக அதிகா தொவித்துள்ளா.

தினத்தந்தி

அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கடலூர் வண்ணாரப்பாளையத்தில் உள்ள அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை, அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர்-607 001 என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) முன்பாக கிடைக்கும்படி கடிதம் எழுதி அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவல் கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து