தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் கல்விக்கட்டணத்துக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்

முதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் கல்விக்கட்டணத்துக்கான காசோலையை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கினார்.

தினத்தந்தி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் திருச்சி வந்தபோது, விமானநிலையத்தில் ஒரு சிறுமி முதல்-அமைச்சரிடம் தன்னை படிக்க வைக்க வேண்டும் என உதவி கோரினார். உடனே மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் சிறுமியின் அருகே சென்று அவரது தாயார் கவிதாவிடம் விசாரித்தார். அப்போது கோவையை சேர்ந்த கவிதா தனது கணவர் இறந்துவிட்டதால் 2 குழந்தைகளின் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி கோரினார். இதையடுத்து அவரது 2 குழந்தைகளின் கல்விக்கட்டணத்தை ஏற்பதாக கலெக்டர் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கவிதாவிடம் அவரது குழந்தைகளின் கல்விக்கட்டணத்துக்காக ரூ.61 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கினார். அப்போது கலெக்டர் பிரதீப் குமார் உடன் இருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து