சென்னை,
தமிழகத்தில் நேற்று 169 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 16 ஆயிரத்து 900 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2 ஆயிரத்து 404 பேருக்கு கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 90 பேருக்கு கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என மொத்தம் 2 ஆயிரத்து 494 சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரத்து 369 பேருக்கு கோவிஷீல்டு' தடுப்பூசியும், 1,351 பேருக்கு கோவேக்சின்' தடுப்பூசி என 61 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.