தமிழக செய்திகள்

மார்த்தாண்டம் அருகே டெம்போ மோதி முதியவர் சாவு

மார்த்தாண்டம் அருகே டெம்போ மோதி முதியவர் இறந்தார்.

தினத்தந்தி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டு விளையை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 61), சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளி. இவர் நேற்று பகல் மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் உள்ள புனித தேவ சகாயம் திருத்தலத்தில் உறவினர் ஒருவரின் புது நன்மை நிகழ்ச்சி நடக்க இருந்ததால், அது சம்பந்தமான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார்.

அப்போது அங்கு வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. அதை கிறிஸ்துதாஸ் சாலையில் நின்று பார்த்து கொண்டு இருந்தார். அப்போது வரவேற்பு வளைவுக்கான பொருட்கள் கொண்டு வந்த டெம்போ திரும்பும்போது கிறிஸ்துதாஸ் மீது மோதியது. இதனால் கீழே தூக்கி வீசப்பட்ட கிறிஸ்துதாஸ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே அங்கு இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிறிஸ்துதாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துதாசுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை