தமிழக செய்திகள்

லாரியில் குண்டுக்கல் கடத்தியவர் கைது

நெல்லை அருகே லாரியில் குண்டுக்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நெல்லை அருகே பொன்னாக்குடி கால்வாய் பகுதியில் முன்னீர்பள்ளம் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த ராபின் (வயது 35) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதிச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக குண்டு கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபினை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 25 டன் மதிப்பிலான குண்டு கற்களை டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு