தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நெல்லை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நெல்லை அருகே வி.எம்.சத்திரம் வ.உ.சி. நகர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றார். மற்றொருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி சென்னல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முத்துபாண்டி (வயது 30) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 500, செல்போன், 2 கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற தூத்துக்குடி வசவப்பப்புரத்தை சேர்ந்த வேம்புராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்