தமிழக செய்திகள்

சூறாவளி காற்றுக்கு மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன

சூறாவளி காற்றுக்கு மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன

தினத்தந்தி

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அதில் குடியிருப்பின் பிரதான சாலையில் 7-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.. மேலும் மரங்கள் முறிந்தது. இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.

இதேபோல தோப்பூர் ஊராட்சியில் கண்மணி தெருவில் ஒரே சமயத்தில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் 2 மரங்கள் சாய்ந்து தெருவில் விழுந்தது. இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. இந்தநிலையில் தனக்கன்குளம் நேதாஜிநகரில் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள்அப்புறப்படுத்தப்பட் டன.

தோப்பூர் கண்மணி தெருவில் ஊராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும்பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பங்களில் அறுந்து தொங்கிய வயர்களை அப்புறப்படுத்தியதோடு புதிய மின்கம்பங்கள் ஊன்றும் பணியில் ஈடுபட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு