தமிழக செய்திகள்

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

சுரண்டை அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்கப்பட்டது.

சுரண்டை:

சுரண்டை அருகே குலையநேரி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பூப்பாண்டியாபுரம் கிராமத்திற்கு கூடுதல் நீர் ஆதாரத்திற்காக கடந்த 2016-ம் ஆண்டு மூன்று லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கிணற்றின் மேல் கம்பி வலை அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதன் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டி, கிணற்றின் மீது சேதமடைந்த கம்பி வலையில் ஏறும்போது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் முத்துசெல்வம், பாலச்சந்தர், ரவீந்திரன் மற்றும் வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு