தமிழக செய்திகள்

3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெண்ணிற கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் கோதண்டன் தலைமை தாங்கினார். இதில் திரளான நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கையில் வெண்ணிற கொடியேந்தி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு