தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 31-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக முடிப்பதோடு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.'

அமைச்சர்களுக்கு கடிதம்

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் கூட்டம் வரும் 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், 31.10.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த விவரங்கள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கவர்னர் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் மாளிகைக்கு வெளியே நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதுசம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆளும் கட்சியான தி.மு.க.வையும் கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதை சற்று கவனமாக தமிழக அரசு உற்று நோக்குகிறது. எனவே இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்