தமிழக செய்திகள்

பெருமாள் தீயனூர் ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

பெருமாள் தீயனூர் ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள பெருமாள்தீயனூர் ஓடையில் டிராக்டரில் ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதனைதொடர்ந்து போலீசார் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு