தமிழக செய்திகள்

ஆசிரியர்கள் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு

ஆசிரியர்கள் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர் உள்ளார். இதே பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து தாக்கி கொண்டனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை