மேட்டூர்,
தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தீவிரம் அடையும். ஆனால் இந்த ஆண்டு கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இதுவரை பருவமழை தீவிரம் அடையவில்லை. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 22.78 அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் வலதுகரை பகுதியில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறை, மண் திட்டுகள் வெளியே தெரிகின்றன.
டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய காலகட்டமான ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்தபட்சம் 80 அடிக்கு மேல் இருக்கும். இந்த நிலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. தற்போதுள்ள நீர் இருப்பு பாசனத்திற்கு கை கொடுக்காவிட்டாலும், குடிநீர் தேவையையாவது முற்றிலுமாக பூர்த்தி செய்யுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.