தமிழக செய்திகள்

கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி

வீரவநல்லூர் அருகே கால்வாயில் விழுந்து தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 35), சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீரவநல்லூர் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சி கால்வாயில் குளிக்க சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் சடலமாக மிதந்தது. தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்