தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி.. போன் நம்பர் கேட்டும் தொந்தரவு

சிறுமியின் தொலைபேசி எண்ணை கேட்டும், தன்னிடம் பேசுமாறு தொந்தரவு செய்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 51). தொழிலாளியான இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பேசி பழகியுள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, தொலைபேசி எண்ணை கேட்டும், தன்னிடம் பேச வேண்டும் எனவும் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சாதிக் பாட்ஷாவை போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு