தமிழக செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்

சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயமடைந்தார்.

தினத்தந்தி

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதா (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி திருவள்ளூரில் கட்டிட வேலையை முடித்து விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாச்சூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது திருவள்ளூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் ராதா மீது மோதியது. இதில் இவருக்கு தலை மற்றும் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ராதாவின் மகன் நவீன் குமார் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து