தமிழக செய்திகள்

லாரியில் 100 லிட்டர் டீசல் திருட்டு

நெல்லை அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியில் 100 லிட்டர் டீசலை மர்மநபர் திருடி சென்றார்.

தினத்தந்தி

திருச்சி ஸ்ரீஜீவன்நகரை சேர்ந்தவர் சுந்தர். லாரி டிரைவரான இவர் சேலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு லாரியில் சென்றார். அப்போது நெல்லை அருகே கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் அந்த லாரியின் டீசல் டேங்கை உடைத்து அதில் இருந்த 100 லிட்டர் டீசலை திருடி சென்றார். இதுகுறித்து சுந்தர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை