தமிழக செய்திகள்

மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஆட்டோவில் வைத்திருந்த பணம் திருட்டு

மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மெரினா கலங்கரை விளக்கம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, அங்குள்ள 'டீ' கடைக்கு சென்றார்.

'டீ' சாப்பிட்டு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டோவில் தனது இருக்கையின் அருகே இருந்த பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சு ஆகியவை திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து ரமேஷ், மெரினா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு