தமிழக செய்திகள்

மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 36). இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து