தேனி,
தேனி மாவட்ட ஆட்சியராக கடந்த 2018 ஆம் ஆண்டு பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக இவர் சென்னை வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார். தேனி மாவட்டத்தின் 15-வது ஆட்சியராக ஆக பதிவியேற்ற பல்லவி பல்தேவ், அந்த மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றார்.
இதையடுத்து பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்லவி பல்தேவ் தற்போது சென்னையில் உள்ள நில நிர்வாகக் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், தமிழக அரசின் நிதித்துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, தற்போது தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.