தமிழக செய்திகள்

வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள பிச்சைரெட்டியபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டின் கான்கிரீட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் குடிசை அமைத்து, அதில் சமையல் செய்து வந்துள்ளனர். நேற்று மாலை அவரது மனைவி சமையல் செய்தபோது, கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, அதில் தீப்பற்றியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். இருப்பினும் சிறிது நேரத்தில் குடிசை முழுவதுமாக எரிந்ததுடன், அதில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்