தமிழக செய்திகள்

சொக்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

தினத்தந்தி

விருதுநகரில் பழமை வாய்ந்த மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமியும், அம்மனும் ரிஷபம், பூதம், அன்னம், யானை, காமதேனு, நந்தி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி, அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து