தமிழக செய்திகள்

திருநாகேஸ்வரமுடையார் கோவில் திருவிழா

திருநாகேஸ்வரமுடையார் கோவில் திருவிழா நடைபெற்றது.

தினத்தந்தி

நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது. இதில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவபெருமான் மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை பூ உள்ளிட்ட 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பூப்பல்லக்கில் உற்சவர் முளைப்பாரியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து