தமிழக செய்திகள்

லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

ஓய்வு பெற்ற பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் தான் வாங்கிய புதிய மினி பேருந்துக்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர் சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் திலகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்