தமிழக செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை:

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களும் பிரதி வாரம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் நாளை மறுநாள் (23-ந் தேதி) வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் இன்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்