தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு கட்சி சார்பில் ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. காவல்துறையின் முடிவுக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துபவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.