தமிழக செய்திகள்

டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

போளூர் அருகே டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நடேசன் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். அவரது நண்பர் பாக்யராஜ். இருவரும் போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து டிப்பர் லாரியில் நிரப்பி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராம்குமார், பாக்யராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்