தமிழக செய்திகள்

திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்செந்தூர்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், உடன்குடி அருகே மெஞ்ஞானபுரம் அடுத்த கல்விளை பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வாக்குசேகரிக்க சென்றார். அப்போது, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டி அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை பெண்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் எதிர்ப்பால் பிரசாரத்தை மேற்கொள்ளாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திரும்பிச்சென்றார்.

திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கேஆர்எம் ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாம் தமிழர் வேட்பாளராக ஒபிலியாவும், தவெக வேட்பாளராக முருகனும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.